சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தொடங்கவுள்ள சூரி, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படப்பிடிப்புகள்!

1564026076 3303
1564026076 3303

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படம் பற்றிய பேச்சுக்கள் எழுந்தபோது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

முதலில் அஜ்னபி என்ற நாவலைத் தழுவி முழுக்க முழுக்க துபாயில் படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில் சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டது.

இதனால் சூரி, வெற்றிமாறன் படம் டிராப் ஆனதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது வேறு ஒரு நூலை வைத்து கதை எழுதி முடித்து விட்டாராம் வெற்றிமாறன்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை திரைக்கதையாக எழுதியுள்ளாராம் வெற்றிமாறன். கதைப்படி சூரிக்கு கார் டிரைவர் வேடமாம்.

மேலும் சூரி, வெற்றிமாறன் இணையும் படத்திற்கு துணைவன் என்ற தலைப்பையே வைத்து விடலாம் என படக்குழுவினர் யோசித்து வருகிறார்களாம்.

விரைவில் சூரி, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.