ஒற்றை தலைவலி குணமாக சில எளிய வழிமுறைகள்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 76
625.500.560.350.160.300.053.800.900.160.90 76

ஒற்றைத் தலைவலி பரம்பரையாகவும், பணி சூழல், உணவு முறைகளாலும் ஏற்படக்கூடியது. ஆண்களை விட பெண்களே அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். ஒற்றைத் தலைவலியில் கண் நரம்பு ஒற்றைத் தலைவலி, பக்கவாத ஒற்றைத் தலைவலி, முக நரம்பு ஒற்றைத் தலைவலி என வகைகள் உண்டு.

ஒற்றை தலைவலி வந்தவுடன் சிலருக்கு வாந்தி உண்டாகும். படபடப்பு, அதிக களைப்பு, பசியின்மை ஏற்படும். மூக்கிலிருந்து நீர் கசியும். அதிக மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். லேசான தலைவலியுடன் ஆரம்பித்து தீவிர தலைவலியாக தொடர்ந்து நீடிக்கும்.

நல்லெண்ணெய் 100 மிலீ உடன் 5 மிலீ குப்பைமேனி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றைத்தலைவலி குணமாகும்.

நல்லெண்ணெய் கால் லீட்டரில் கருஞ்சீரகப்பொடி 50 கிராம், நெய் 10 கிராம், எலுமிச்சை சாறு 10 மிலீ, வெற்றிலைச்சாறு 10 மிலீ கலந்து நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றைத்தலைவலி குணமாகும்.