பாதாம் பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.
தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பருப்பினை சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட உணவை எளிதில் செரிக்க வைக்கின்றது.
ஊறவைத்த பாதாமால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும். நமது இரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெரோல் என்கிற பொருள் அதிகரிக்கிறது.
பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடையும். உயிரணுக்கள் அதிகரித்து ஆண்மைக்குறைவு குறைபாடுகள் நீங்கும்.
பாதாமில் கொழுப்பு காணப்படுவதால் இது எளிதில் வயிற்றை நிரப்பி விடும். உடல் எடை குறையும்.
தண்ணீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், சர்க்கரை அளவும் கட்டுப்படும்.
கர்ப்பிணி பெண்களுக்கு இதில் உள்ள ஃபோலிக் அமிலம் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
ஊறவைத்த பாதாமில் உள்ள ஆன்டி-ஆக்ஸி டென்ட்களால் இளமை தோற்றம் கிடைக்கும், இதிலுள்ள பி17 வைட்டமின் புற்றுநோயை எதிர்க்கும்.
பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை.