கருமையை போக்கி முகத்தை பளிச்சிட செய்யும் பாசிப்பருப்பு

1615642150 3264
1615642150 3264

ஒரு ஸ்பூன் பாசி பருப்பு பொடியுடன் 2 தே. க எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் தேய்த்து விடுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வர சருமத்தையும், அழகையும் தரும்.

1 தே. க பாசிப்பருப்ப்பை எடுத்து அதனை ஆலிவ் எண்ணெயுடன் குழைத்து தினமும் முகத்தில் தடவி கொள்ளுங்கள். இதை 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்யும் போது, வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் ஏற்படும் மேடு பள்ளம் போன்ற அமைப்பு நீங்கும்.

பாசிப்பருப்பு, கசகசா, பிஸ்தா, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து, பொடி செய்து இந்த பவுடரை சிறிதளவு பாலுடன் சேர்த்து முகத்தில் பூசி 25 நிமிடங்கள் கழித்த பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுகள் காணாமல் போகும்.

1 தே. க பாசிப்பருப்பு, 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் இரண்டையும் கலந்து முகத்தில் தடவுங்கள். இது விரைவில் கருமையை போக்கி முகத்தை பளிச்சென்று மாற்றும்.

இந்த பவுடர்களை ஒரு காற்று புகாத ஒரு சிறு டப்பாவில் போட்டு பத்திரமாக வைத்து விடுவது நல்லது. இந்த பவுடரை தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.