இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் நாட்டு சர்க்கரை!

1525846497 3058
1525846497 3058

நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது. மேலும் வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.

நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

நாட்டு சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் காக்கும்.

வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இதை வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது நாட்டு சர்க்கரை.