இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் வாழைப்பூ!

vazhaipoo vadai
vazhaipoo vadai

வாழை பூ பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. வாழை பூவை ரசம் செய்து சாப்பிட்டால் பெண்களின் வெள்ளைப்படுதல் நீங்கும்.

வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி, கை, கால் எரிச்சல் உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் எரிச்சல் போகும். வாழைப் பூவிலிருந்து சாறு எடுத்து அத்துடன் பனங் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் உதிரக் கடுப்பு இருக்காது.

வாழைப்பூவில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதய நலத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர அடிக்கடி வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோய் உடையவர்கள் வாழைப்பூவை சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் கணையம் வலுப்பெற்று இன்சுலினை சுரக்க செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வரும்.

பேயன் வாழைப் பூவை பதமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் உதிரக் கடுப்பு இருக்காது, கை, கால் எரிச்சல் நீங்கும், வெள்ளை படுதல் நீங்கும், ரத்த மூலம் போக்கும். பேயன் வாழைப் பூவில் துவர்ப்பு தன்மை இருக்காது.

வாழைப்பூக் கறி பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, வயிற்றில் பூச்சி முதலிய வியாதிகளுக்கு சஞ்சீவி போன்றது. வாழைப்பூவை வாரத்திற்கு ஒருமுறையேனும் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.