வியர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

samayam tamil 4
samayam tamil 4

பொதுவாக அளவான ஆல்கஹாலில் மன அழுத்த குணம் இருப்பதால், வியர் குடிப்பது மன நிலையை இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் வியர் அருந்துபவர்களுக்கு 20 – 50% இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வியர் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தருகிறது. எனவே இரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. வியர் தயாரிக்கப்படும் பார்லியில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் வியரில் இருந்து கிடைத்துவிடுமாம். மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விற்றமின் பி6, விற்றமின் பி12 போன்ற விற்றமின்கள் கிடைகின்றன. வியர் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

வியர் கல்லீரலுக்கு நல்லது. மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்த குழாய்களை அகலப்படுத்த உதவுகிறதாம். மேலும், வியர் கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம். தூக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு வியரில் உள்ள நிக்கோடினிக் அமிலங்கள் தூக்கம் ஊக்கியாக செயல்பட்டு நல்ல உறக்கம் கிடைக்கும்.