அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்!

NTLRG 20211206184651797597 2
NTLRG 20211206184651797597 2

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
காரணங்கள்:
மார்பகப் புற்றுநோய் செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக உடலில் எங்குவேண்டுமானாலும் பரவலாம். பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. மற்ற செல்களிலும் ஏற்படலாம்.

மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். பாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்றுக்கு இலக்காகலாம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும்.
அதிக விரைவில் பூப்படைவது, புகை மற்றும் மது பழக்கம், உடல் பருமன், மரபியல் போன்றவை மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம். பொதுவாக 10 முதல் 15 சதவிகித மார்பகப் புற்றுநோய் மரபியல் காரணமாக வருகிறது.

அறிகுறிகள்:
மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல். மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல். மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.
சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.

முதல் நிலை: மார்பகத்தில் புற்றுநோய் செல்கள் உருவாகி, கட்டிகள் அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். இரண்டாம் நிலை: மார்பகக் காம்புப் பகுதியில், மார்பகத்தின் அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். மூன்றாம் நிலை: மார்பகத்தைச் சுற்றியுள்ள தசைப் பகுதிகள் முழுவதும் பாதிக்கப் பட்டிருக்கும். நான்காம் நிலை: மார்பகம் முழுதாகப் பாதிக்கப்பட்டு, கல்லீரல், நுரையீரல் என மற்ற உறுப்புகளுக்கும் புற்றுநோய் செல் பரவியிருக்கும். மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பக புற்றுநோய் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை.