தலைவலிக்கான முக்கிய காரணங்கள்

migraine headache home remedies updatenews360
migraine headache home remedies updatenews360

தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தலைவலி என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றுதான்.

தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகின்றன. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து நம்மை பாடாய் படுத்திவிடும்.

தலைவலிக்கு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலை நமக்கு விளைவித்துவிடும்.

வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே போதும் எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

தலைவலி வராமல் தவிர்க்க வேண்டியது

  • தலைவலிக்கும் போது எந்த காரணத்தையும் கொண்டு காபி குடிக்க கூடாது.
  • தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் சாப்பிடக்கூடாது. இது இன்னும் தலைவலியை அதிகப்படுத்திவிடும்.
  • மது அருந்துவதை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். கிட்டதட்ட 29 முதல் 36 சதவீதம் வரையிலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு மது அருந்துவதால் வரக்கூடும்.
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது.
  • சர்க்கரை உடலுக்குக் கேடு என்பதால் சிலர் செயற்கை இனிப்புகளை சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக அமையும். எனவே, அவற்றை தவிர்ப்பது சிறந்தது.
  • அதிகளவில் சாக்லெட் சாப்பிடுவதால் கூட தலைவலி பிரச்சனை வரக்கூடும்.

தலைவலிக்கு முக்கிய காரணங்கள்

  • காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், தலையை சீவிக் கொள்வதால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடுகிறது. பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்குகிறது. ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுத்து விடலாம்.

சரியாக சாப்பிட்டாவிட்டாலும்

  • சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கி விடும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது சிறந்தது.

வாசனை திரவியங்கள்

  • உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கி விடும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

டிவி மற்றும் கம்ப்யூட்டரை பார்த்துக் கொண்டிருத்தல்

  • கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படும். மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பார்கள். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்ப்பது மிகவும் சிறந்தது.

குறைவான தூக்கம்

  • ஒரு நாளைக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் முக்கியம். இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். குறைவாக தூங்கினால் ஒற்றை தலைவலி ஏற்படும். நன்றாக தூக்கினால் தலைவலியை வராமல் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.