உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடைய செய்கிறது இயற்கையாக மூலிகைகளான துளிசியும் மஞ்சளும் அதாவது துளசியிலும், மஞ்சளும் கலந்த பானத்தை பருகுவதனால் கிடைக்கும் நன்மைகளாக
குடிபானம் தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கினால் பானம் தயாராகி விடும் .
ஆஸ்துமா
துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவி செய்யும். சுவாசப்பாதையை சீராக்கும் .
சிறுநீரகம்
சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இது வழிவகுக்கிறது .
மன அழுத்தம் நீங்கும்
துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைத்து விடும்.
மலச்சிக்கல்
நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை சீர் செய்ய உதவுகிறது .
தலைவலி
தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி தடுத்து விடலாம்.