சுவாசக் கோளாரிற்கு தீர்வை வழங்கும் சில வழிமுறைகள்

22222
22222

எந்த வயதினரையும் தாக்க கூடிய நோய்களில் ஆஸ்துமா முக்கிய இடம் வகிக்கிறது. ஆஸ்துமா என்பது ஒரு சுவாசக் கோளாறு அதாவது சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படுகின்ற ஒன்றாகும் .

மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள் அமைகிறது .

அந்தவகையில் ஆஸ்துமா நோயில் இருந்து எளிதில் விடுபட பெரிதும் உதவுகின்ற சில இயற்கை உணவுகள் முறைகளை பற்றி பாப்போம்

01.அருகம்புல் சாற்றை தினமும் அதிகாலை வேளையில் பருக வேண்டும். மற்றும் 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வர வேண்டும். இதை தினசரி வருவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் .

02..தூதுவளை இலைகளில் ரசத்தை வைத்து சாதத்தில் பிசைந்து உண்பது வில்வ இலையுடன், மிளகை சேர்த்து உண்பது என்பவற்றை செய்யலாம். குறிப்பாக இதன் பிறகு நன்றாக தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும்.

03.மாதுளை சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். முசுமுசுக்கை என்ற இலையை நன்றாக வதக்கி பின்பு உண்ணலாம்.

04.மிளகு மூன்று, கற்பூரவல்லி இலை மூன்று, வெற்றிலை இரண்டு எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு வற்றியவுடன் அந்த நீரை குடிக்கலாம்.
ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து கொள்ள வேண்டும். பின்பு காலை மற்றும் மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் சளிப் பிரச்சனைகள் அறவே நீங்கிவிடும்.

05.கடுகை அரைத்து அதனுடன் தேன் கலந்து உண்டால் காலை வேலைகளில் வரும் வறட்டு இருமல் குறைந்து விடும். ஆடாதோடை இலையை கீரைபோல சாதத்திலும் பிசைந்து உண்டு வருவதன் மூலமும் நல்ல தீர்வையை பெற்றுக்கொள்ளலாம் .