நகம் கடிப்பதால் உயிருக்கே ஆபத்தாம்!

10 1507624059 1
10 1507624059 1

நகம் கடிக்கும் பழக்கத்தை பலரும் கொண்டிருப்பார்கள். கோபம், பயம், யோசனை வரும் சமயங்களில் நகம் கடிப்பது பலரின் வழக்கம்.

நகம் கடிப்பதால் உடலுக்கு ஆரோக்கிய சீர்கேடு ஏற்படுவதுடன் ஒருகட்டத்தில் அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

நாம் நகம் கடிப்பதால், உடலில் பாக்டீரியா தொற்று கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும். இதனால் உறுப்பு செயலிழப்பு ஏற்படுகிறது.

முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் செப்சிஸ் தொற்று, செப்டிக் ஷாக் என்னும் உயிருக்கு ஆபத்தான நிலையைத் தோற்றுவிக்கும். மேயோ கிளினிக்கின் படி, சுவாச துடிப்பு அதிகரித்தல், மூச்சு விட சிரமம் அடைதல், ஈரம் அதிகம் உள்ள சருமம், குழப்பம், வயிற்று வலி, போன்றவை செப்சிஸ் நோயின் அறிகுறியாகும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செப்சிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். 250,000 அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் செப்சிஸ் நோயால் இறக்கின்றனர், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், செப்சிஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்கள்.

நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ் என்ற சீழ் பிடிப்பு நோயைப் பற்றி பலருக்கும் தெரியாது. அதற்கான அறிகுறிகள் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைப்பதில்லை.

இதனை பற்றிய விழிப்புணர்வு அவசியம் வேண்டும். எந்த வயது மக்களையும் இந்தத் தொற்று தாக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.