ஆயுளை அதிகரிக்கும் வேர்க்கடலை!

mani 1
mani 1

பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலை. இதில் மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம் என்று சொல்லப்படுகின்றது.

நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

அந்தவகையில் தற்போது இதனை தொடர்ந்து சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை சீராக செயல்படும். கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது.எலும்பு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாது.

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவு உண்டு வந்தால் பித்தப்பையில் கல் இருந்தால் அவை கரையும். இதயத்தை பாதுகாக்கும். உடல் வலிமை பெறும் .உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.உடலிக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும். இதயம் சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இளமையை தக்கவைக்க உதவும். ஆண்மை சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்.

மூளை சிறப்பாக செயல்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராகும். மன அழுத்தம் சரியாகும். கொழுப்பை குறைக்கும்.

நிலக்கடலையை ஊறவைத்து பால் எடுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதை போல் சாப்பிட்டு வந்தால் ஆண்மை வீரியம் அதிகரிக்கும்.

கருப்பை பிரச்சனைகள் ஏற்படாது. உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும். உடலை வலுபடுத்தும். இதயத்தை வலுபடுத்தும். உடலுக்கு நோய் எதுவும் வராமல் தடுக்கும்.