நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘திரிபலா’!

நாம் உண்ணும் உணவு செமிபாடடையாமல் இருக்கும் பட்சத்தில், வயிற்று பிரச்சினைகள் வரக்கூடும்.

இதுபோன்ற பிரச்சினைக்கு ‘திரிபாலா பொடி’, தீர்வு தரும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் உள்ளடங்கிய கூட்டுப்பொருள்தான் ‘திரிபலா.’ இதனை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதங்களின் நன்மை வந்துசேரும்.

இந்த மூலிகை, உணவுப்பாதையில் உள்ள நச்சுக்களை நீக்கி, குடல் இயக்கத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் வெளியேற்றும்.

செமிபாடு கோளாறு பிரச்சினையை சரிசெய்யும். குறிப்பாக வயிற்றில் பூச்சிகள் வளர்வதை தடுக்கும். அதோடு வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவும். வயிற்றுப்புண்களை ஆற்றும்.

‘தான்றிக்’ காய் செமிபாடு அடைவதை மேம்படுத்துவதோடு பக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் இது துணைபுரியும்.

‘கடுக்காய்’ வயிறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் விட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சுவாசப் பாதையில் படிந்திருக்கும் சளியை நீக்கி நுரையீரல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

திரிபலாவில் இருக்கும் கசப்பு சுவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து குளுகோஸின் அளவை சமநிலைப்படுத்தவும் செய்யும்.

சுவாசக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி சீரான சுவாசத்திற்கு வழிவகை செய்யும். சுவாசப் பாதையில் அடைக்கப்பட்டிருக்கும் சளியை நீக்கும். இரத்த சோகை பாதிப்புக்குள்ளானவர்கள் திரிபலாவை சாப்பிட்டுவரலாம்.

அதற்கு இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் தன்மை இருக்கிறது. இதய நோய் வராமல் தற்காத்துக்கொள்ளவும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.

திரிபலா பொடியை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக திரித்துகொள்ளலாம். அல்லது நாட்டு மருந்து கடையில் திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடியை கலந்து, வெறும் வயிற்றில் பருகலாம். இரவில் தூங்கச் செல்லும்போதும் பருகுங்கள்.