எல்லா நலமும் தரும் வெறுங்கால் நடைப்பயிற்சி!

download 17
download 17

பொதுவாக அந்தகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள் காலில் செருப்பு இல்லாம் வெறுந்தரையில் தான் நடப்பார்கள். இதனால் இவர்கள் நீண்ட காலம் நோய் நொடி ஒன்று வாழ்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது.

இப்படி காலணிகள் இல்லாமல் வெறும் காலுடன் தரையில் நடப்பது புவி தொடுப்பு அல்லது மண் அணைத்தல் என்று அழைக்கப்படுகின்றது.

இந்தப் பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களிலேயே உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும் என கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது இப்படி நடப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
இதயத் துடிப்பை சீராக்குகிறது.
பல நாள்பட்ட நோய்களுக்கு வீக்கத்தோடு ஒரு தொடர்பு உண்டு என்று நவீன அறிவியல் கருதுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது.
பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை இந்தப் பயிற்சிக்கு உண்டு.
நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
போதுமான எலக்ட்ரான்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பூமியிலிருந்து நாம் பெறும் எலக்ட்ரான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் விளைவுகளை ஏற்படுத்தும். இவை நமது உடலை வீக்கத்திலிருந்தும், பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முன்னேயும் பாதுகாக்கும்.