அடர்த்தியான புருவங்களை பெற சில எளிய குறிப்புகள்

625.500.560.350.160.300.053.800.900.160.90 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 5

பொதுவாக நமது முகத்தில் கண்களுக்கு அடுத்தப்படியாக அழகினை கொடுப்பது புருவங்கள் தான்.

ஆனால் இது சிலருக்கு அடர்த்தியாகவும், சிலருக்கு மெல்லிசாக காணப்படும்.

கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும்.

என்னதான் செயற்கையாக பென்சிலில் புருவங்கள் வரைந்து அழகு செய்தாலும் அதில் அத்தனை அழகு மிளிராது.

எனவே வீட்டிலேயே புருவங்கள் அடர்த்தியாக வளர என்ன செய்யலாம் என்று தற்போது பார்ப்போம்.

தினமும் விளக்கெண்ணெய் கொண்டு இரவு மசாஜ் செய்துவிட்டு அப்படியே படுத்துவிடுங்கள். முடி அடர்த்தியாக வளரும். ஏனெனில் விளக்கெண்ணெய் இருக்கும் புரதச்சத்து, கொழுப்பு அமிலம், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின்கள் முடிகளுக்கு போதுமான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.

தேங்காய் எண்ணெய் புருவங்களுக்கு வறட்சி இல்லாமல் எண்ணெய் பதம் அளிக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே தேங்காய் எண்ணெயை தடவி 30 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.

ஆலிவ் எண்ணெய் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ சத்து நிறைவாக உள்ளது. எண்ணெயை புருவத்தில் மசாஜ் செய்து 2 மணி நேரம் ஊற வைத்து பின் கழுவிவிடுங்கள்.

வெங்காய சாறு சல்பர், செலினியம், மினரல், வைட்டமின் பி மற்றும் சி இருப்பது முடி வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே அதன் சாறை புருவத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் கழித்து கழுவுங்கள்.
.
கற்றாழையும் முடி வளர்ச்சியை தூண்ட உதவும். எனவே அதன் சதையை எடுத்து புருவத்தில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.