கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கும் இயற்கை வழிகள்

jammu encounter 1
jammu encounter 1

பொதுவாக சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும்.

இதற்கு முக்கிய காரணமாாக வெயிலில் அலைவது கூட இருக்கலாம்.

இதற்கு கண்ட கண்ட கிறீம்களை வாங்கி போடமால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது கழுத்து கருமை போக்கும் சில எளிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும். பின்னர் குளிக்க கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.

ஒரு தே.க பால் பவுடர், ஒரு தே.க தேன், ஒரு தே.க எலுமிச்சை சாறு. அரை டீ தே.க பாதம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை இதுபோல் பேக் போட முகமும், கழுத்தும் பளிச் ஆகும்.

சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதியில் அப்ளை செய்யவும். கழுத்துக் கருமை போகும் உருளைக்கிழங்கு சிறந்த பிளீச் ஆக செயல்படுகிறது.

உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்துக்கொள்ளவும். அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்க்கலாம். பின்னர் அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும்.

தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும். எளிமையான இந்த வைத்தியத்தை தினசரி செய்து வர சில வாரங்களில் கழுத்துக் கருமை சரியாகும்.

ஆரஞ்சு சுளையை எடுத்து அதனுடன் பன்னீர் அல்லது பால் கலந்து அப்ளை செய்யவும். 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கழுத்துப்பகுதி பளிச் என்று மாறும்.