ஒருவரை அடையாளம் காட்டுவதற்கு முற்காலத்தில் ‘அந்த கண்ணாடிபோட்ட ஆள்’ என்று குறிப்பிடுவார்கள். அப்போது கண்ணாடி அணிந்தவர்கள் அந்த அளவுக்கு குறைவாக இருந்தார்கள்.
இப்போது அப்படி அடையாளம் காட்ட முடியாது. ஏன்என்றால், வீட்டிற்கு ஒருவரோ அல்லது வீட்டில் அனைவருமோ கண்ணாடி அணிந்தவர்களாக காட்சியளிக்கிறார்கள்.
இன்று, அதிக எண்ணிக்கையிலான மக்கள் கண்ணியமான பார்வை பற்றிய புகார்களைக் கொண்ட கண் மருத்துவர்கள் பற்றித் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை மிகவும் அருகில் சென்று பார்ப்பதுடன், புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ தொடர்ச்சியாக வாசிக்கும்போது கண் எரிகின்றது, கண்களிலிருந்து நீர் வருகின்றது, கண் வலிக்கின்றது எனச் சொல்வார்களேயானால் அவர்களின் கண்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதுடன் உடனே ஒரு கண் வைத்தியரை நாடுவதே மிகவும் சிறந்தது.
கண்களை இமைத்தல், கணினி பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் கண்களை தொடர்ந்து இமைப்பது இல்லை. கண்களை சீரான முறையில் இமைத்து வந்தாலே நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.
கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் இருக்க கண்களை பராமரிக்க வழிகள்
கண் பார்வையை பராமரிக்க தொடர்ந்து கண்ணுக்கு வேலை கொடுக்காமல், அவ்வப்போது கண்களுக்கு ஓய்வும் கொடுக்கவேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்ற அளவிலாவது அந்த ஓய்வு அமையவேண்டும். குளிர்ந்த நீரில் அவ்வப்போது முகத்தை கழுவுவதும் நல்லது.
இனிப்பு வகை உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும்.
சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும்.
ஒருமுறை உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை 20 வினாடிகள் உற்றுப்பார்க்கவேண்டும். பின்பு கண்களை அதிலிருந்து விலக்கிவிட்டு வேலையை தொடரவேண்டும்.
கண்களை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டு, கண்களை மூடிக்கொண்டு அதன் மீது வெள்ளரிக்காய் துண்டுகளை சிறிது நேரம் வைத்திருங்கள். கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் இருக்க மீன் வகைகளை சாப்பிடுதல் நல்லது.