ஒரே ஒரு மிளகு போதும்…. சுவைக்காக!
இரு மிளகெடுத்து, இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்து உண்டு வர இருமல், சளி காணாமல் போகும்.
மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்தால் கேசம் அடர்த்தியாக வளரும்.
நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்
ஐந்து மிளகும், சுக்கும், திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
ஆறு மிளகெடுத்து, பெருஞ்சீரகம் ( சோம்பு) இழைத்து உண்ண, மூல நோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
ஏழு மிளகைப் பொடி செய்து, நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால், நல்லபசி எடுக்கும்.
எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால், வாந்தி கூட எட்டி நிற்கும்.
ஒன்பது மிளகும், துளசியும், ஒவ்வாமையை துரத்தியடிக்கும்.
பத்து மிளகை வாயில் போட்டுக் கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமின்றி விருந்து உண்ணலாம்.