பாதி எலுமிச்சை பழத்தை படுக்கை அறையில் வைத்தால் நடக்கும் அற்புதங்கள்!

20180124082309276aaaaaaaa22
20180124082309276aaaaaaaa22

எலுமிச்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருப்பது அனைவருமே அறிந்த ஒன்று தான்!

பொதுவாக எலுமிச்சையை உணவில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி தான் தெரியும். ஆனால் அதை வெட்டி படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்பது தெரியுமா?

சுவாசம் மேம்படும்
இரவில் சிலருக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு, அதனால் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுபவர்கள் இரவில் ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால் மூக்கடைப்பு நீங்கி, நிம்மதியாக சுவாசிக்க முடியும்.

காற்றின் தரம் மேம்படும்
எலுமிச்சையின் ஒரு துண்டு, தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை உறிஞ்ச உதவி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவும்

மன அழுத்தம் நீங்கும்
இரவில் படுக்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்துக் கொண்டு தூங்கினால், அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகும்.

பூச்சிக்கொல்லி
இது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லி. எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணத்தால், பூச்சிகள் நம்மை அண்டாமல் இருக்கும்.

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்
இதிலிருந்து வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க உதவும்.