செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்!

maxresdefault
maxresdefault

உலகெங்கிலும் பல வகையான பூக்கள் இருக்கின்றன. இவற்றில் பல பூக்கள் மிகுந்த அழகையும், வாசனை கொண்டவையாக இருக்கின்றன.

அதிலும் சில பூக்கள் மனிதர்களின் நோய்களை போக்கும் குணம் பெற்றவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பூவினங்களில் ஒன்று தான் செம்பருத்தி பூ.

நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இந்தப் பூவில் பல மருத்துவ சிறப்புகள் அடங்கியுள்ளது.

இதன் இலை, பூ , வேர் முதலியவை மருத்துவப் பயன் உடையது. இது சில நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகின்றது.

அந்தவகையில் தற்போது செம்பருத்தி பூவில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

செம்பருத்தி பூவின் சாற்றை, சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, கண்ணாடி போட்டிகளில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கருத்து அடர்த்தியாக வளரும்.

வாய்புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளக்க செய்யும். பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் பேன்கள் குறையும்.

10 பூக்களின் இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்.

கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணி செம்பருத்தி பூக்கள். பூவிதழ்களை 200 மி.லி நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டை தூள் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட ரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து ரத்த சோகை நோய் குறையும். மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும்.