ஆத்மார்த்தமான கூத்துக்கலைஞனின் இறுதி ஆசை!!

08 n
08 n

இணையத்தில் உலவும் இந்தப் புகைப்படம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

ஒரு ஆத்மார்த்தமான கலைஞனின் இறுதி ஆசை எப்போதும் இப்படித்தான் இருக்கும் .

பெரும்பாலும் அவனின் ஆசை நிறைவேற்றப்படுவதில்லை . ஆனாலும் இந்த கூத்து கலைஞனின் ஆசை நிறைவுகண்டுள்ளது .

அரியலூர் மாவட்டம், மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற கூத்துக் கலைஞர் தனது இறப்பின் இறுதியிலும் கூத்து கலைஞன் வேடத்திலேயே விடைபெற ஆசைப்பட்டுள்ளார்.

உறவுகள் அந்த கலைஞனின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளமை கண்ணீர்மல்கும் நன்றிக்குரியது .

இந்தக் கூத்துக்கலை அவருக்கு செல்வங்களை வாரிக்குவிக்க உதவியிருக்கிறதோ இல்லையோ ஆனால் ஆத்மார்த்தமாக அவரை வாழ வைத்திருக்கிறது .

உலகளாவிய புகழையும் சேர்த்திருக்கவில்லை. ஆனாலும் கலை மேல் இவர் வைத்திருந்த பற்று வியப்பின் சிகரத்திற்கே கொண்டு செல்கிறது.