கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுமா! இதை படியுங்கள்

Tamil News large 467269
Tamil News large 467269

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவி உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் சில தடுப்பு நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.

அவை பின்வருமாறு

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக இருமிய பிறகு, தும்மிய பிறகு, கழிவறைகளை உபயோகித்த பிறகு, சாப்பிடுவதற்கு முன் பின், நோயாளிகளை சந்திக்கும் போது, அவர்களது பொருட்களை பயன்படுத்தும்போது கைகளை கட்டாயம் கழுவ வேண்டும்.

முடிந்தவரை கண்களையும், மூக்கையும் கைகளால் நேரடியாக தொடுவதை தவிர்க்க வேண்டும்.

கூட்ட நெரிசல் நிறைந்த இடங்களில் முகமூடி அணிந்து கொண்டு செல்லலாம்.

மருத்துவர்கள் முடிந்த வரையில் நோயாளிகளையும், அவர்களது உடைமைகளையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

பொதுவாகவே அதிகளவு சுகாதாரத்தை பின்பற்றி கொரோனா வைரசுக்கான எதிர்ப்பாற்றலை உருவாக்கலாம்.

காய்கறிகளையும், பழங்களையும் நன்றாக கழுவி சாப்பிட வேண்டும்.

ஆரேக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்ற சுகாதாரமான பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக நன்றாக உறங்க வேண்டும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.