நாவற்பழத்தை எப்படி சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்

201512260517 na

நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.நாவல் பழத்தில் கல்சியம் பெ◌ாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.அந்தவகையில் நாவற்பழத்தை எப்படி சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும் என இங்கு பார்ப்போம்.

*நாவல் இலையை கொழுந்தாகத் தேர்ந்தெடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனோடு ஒரு ஏலக்காய், சிறிதளவு லவங்கப்பட்டை தூள் ஆகியன சேர்த்து காலை, மாலை என இரண்டு வேளைகள் உள்ளுக்குக் கொடுத்து வர அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகியன குணமாகும்.

*நாவல் பட்டை சூரணத்தை நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து நீர் சுண்டி, குழம்பு பதத்தில் வரும்போது எடுத்து ஆற வைத்து மேல் பூச்சாக, பற்றாகப் போட்டு வருவதால் வாத நோய் தணியும், வலியும் குறையும்.

*நாவல் பழச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் மற்றும் நெல்லிச்சாறு இவை இரண்டையும் சம அளவாகச் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடல் சோர்வு போகும். ரத்தசோகை குணமாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

*அடிக்கடி நாவல் பழத்தை உண்ணுவதால் நுரையீரல் தூண்டப்பட்டு சீராக செயல்படும். சிறுநீர்ப்பை கோளாறுகளும் நீங்கும்.

*நாவல் இலைக் கொழுந்து, மாவிலைக் கொழுந்து இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து புளிப்பில்லாத புதிய தயிரில் கலந்து உள்ளுக்குக் கொடுப்பதால் சீதபேதி, ரத்தபேதி, வயிற்றுக்கடுப்பு, சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.

*நாவல் மரப்பட்டையைத் தூள் செய்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வாய்க் கொப்புளிப்பதால் வாயில் ஏற்பட்ட புண்கள், பல் சொத்தை, ஈறுகளின் வீக்கம் ஆகியன குணமாகும். இதே நீரைக் கொண்டு புண்களைக் கழுவுவதால் விரைவில் புண்கள் ஆறும்