இவை எல்லாம் உங்கள் வீட்டு படுக்கை அறையில் இருந்தால் ஆபத்து !

bennett zfd 14 1582664483
bennett zfd 14 1582664483

நாம் செய்கின்ற, பயன்படுத்துகின்ற ஒவ்வொரு செயலும் பொருட்களும் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது.

அந்த வகையில், நாம் படுக்கை அறையில் பயன்படுத்த கூடிய பல வித பொருட்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்துமாம்

எப்படி படுக்கை அறையில் உள்ள எவ்வகையான பொருட்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதை அறிவோம் வாருங்கள்.

தலையணை உறை

இன்று நாம் பயன்படுத்தும் தலையணை உறையானது முழுக்க முழுக்க வேதி பொருட்கள் நிறைந்த பஞ்சினால் தயாரிக்கின்றனர்.எனவே, தலையணை வாங்கும் போது, இயற்கை முறையில் உற்பத்தி செய்த பஞ்சினால் தயாரித்ததா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள்

படுக்கை அறையில் நீங்கள் வைத்துள்ள அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் நீங்கள் எடுத்து விட வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் பொம்மைகள், கவர்கள், பரிசுகள். ஏனெனில், இவற்றில் பார்மால்டிஹைட் என்ற மோசமான வேதி பொருட்கள் கலக்கப்படுகின்றன

எனவே, இவை படுக்கை அறை வெப்பம் அடையும் போது இந்த பிளாஸ்டிகுகள் வேதி வினை புரிந்து நம் உடலில் ஒட்டி கொண்டு புற்றுநோயை தரும்.

தொலைபேசிகள்

இன்று நம்மில் பலரும் குழந்தையை போல நம் கைப்பேசியை பக்கத்தில் வைத்து கொண்டே தூங்குவோம். ஆனால், இதில் தான் நமக்கு எமன் இருக்கின்றான் என்பது நாம் அறிந்திராத உண்மை. ஆம், புற்றுநோயை உண்டாக்கும் தன்மை இவற்றில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான கதிர்வீச்சில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தரையின் விரிப்புகள்

படுக்கை அறையில் உள்ள தரையின் விரிப்புகளை தவிர்த்து விடுங்கள். இவை மிருகங்களின் தோலின் மூலம் தயாரிக்கப்படுவதால் உடலுக்கு ஒவ்வாமையை தந்து விடும். மேலும், சில நச்சு தன்மை உள்ள பொருட்களினால் தரையின் விரிப்புகள் தயாரிக்கப்படுவதால் ஆஸ்துமா, புற்றநோய் போன்றவை ஏற்படலாம்.