இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஐபிஎல் அணிகளிற்கு போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை பகிரங்க அறிவிப்பை வெளியிடாத போதிலும் (8) அணிகளிற்கும் ஒலிபரப்பு உரிமம் பெற்றவர்களிற்கும் இதனை கோறியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, என பிசிசிஐ தெரிவித்துள்ளது,இயல்பு நிலை ஏற்பட்டவுடன் வருட இறுதியில் போட்டிகளை நடத்தலாம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் என அணியொன்றின் அதிகாரி கூறியுள்ளார்.
இதன் போது இந்திய அரசாங்கத்தின் முடக்கல் தொடர்பான அறிவிப்பிற்காகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் காத்திருந்தார் முடக்கல் நிலை நீடிக்கப்பட்டதும் அவர் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது என கங்குலி தெரிவித்துள்ளார்.