அஸ்வினின் அதிரடி நடவடிக்கை!

.jpg
.jpg

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெற வாய்ப்பில்லாததால் யார்க்‌ஷைர் கவுன்ட்டி அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார் அஸ்வின் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இங்கிலாந்தின் யார்க்ஷைர் கவுண்டி அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்து.

கொரோனா வைரஸ் தொற்றால் போட்டிகள் நடைபெறாத சூழல் இருப்பதால், ஆடி (July)1 ஆம் நாள் வரை போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் யார்க்‌ஷைர் அணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பரஸ்பர உடன்பாடுடன் அஸ்வின் முறித்துக் கொண்டார்.

இந்த அணி ஏற்கனவே வெளிநாட்டு வீரர்களான தென்ஆப்பிரிக்காவின் மகாராஜ் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.