ஆசிய மகளிர் கால்பந்து தொடர் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 1979ஆம் ஆண்டுக்கு பிறகு ஆசிய மகளிர் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இதுவரை 8 அணிகள் பங்கேற்று வந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான தொடரில் 12 அணிகள் களமிறங்க உள்ளன.
2023ஆம் ஆண்டு பிபா மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான இறுதி தகுதிச்சுற்று போட்டியாகவும் இது அமையும்.
2021ஆம் பிபா 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கிண்ண கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், தற்போது ஆசிய மகளிர் கால்பந்து தொடரும் நடக்க உள்ளமை இந்தியாவில் மகளிர் கால்பந்து விளையாட்டு பிரபலமாக உதவும்.