துணிச்சலான வின்டீஸ் அணி: ஆண்டர்சன் பாராட்டு

i3 21 2
i3 21 2

‘‘இக்கட்டான நேரத்தில் விண்டீஸ் அணி டெஸ்டில் விளையாட இங்கிலாந்துக்கு வந்தது துணிச்சலான முடிவு,’’ என, ஆண்டர்சன் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்ற விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் ஜூலை 8ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது :

நீண்ட இடைவெளிக்கு பின், டெஸ்ட் போட்டி நடக்க இருப்பது வரவேற்கத்தக்கது. எங்களது பார்வையில், விண்டீஸ் அணி இங்கிலாந்து வந்ததற்கு நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருப்போம். தற்போது உலகில் என்ன நடக்கிறது என்பதை வைத்து பார்க்கும் போது இவர்களது பயணம் மிகவும் துணிச்சலான முடிவு தான்.

ஊரடங்கின் போது வீட்டில் இருந்தபடி பயிற்சி மேற்கொள்வதற்கு ஓரளவு வசதி இருந்தது. நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தது, பயிற்சி போட்டி இல்லாதது போன்றவை டெஸ்ட் தொடருக்கு சவாலானது. எனவே வீரர்களின் சுமையை குறைக்க சுழற்சி முறையில் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படலாம் என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார் .