விசாரணை பிரிவில் ஆஜராகவுள்ள சங்கக்கார!

sangakkara
sangakkara

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் போது ஸ்ரீலங்கா அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்காரவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் நாளை காலை 09 மணிக்கு அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை 10.15 மணியளவில் விசாரணை பிரிவில் ஆஜராகிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்க சுமார் 2 1/2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.