இத்தாலியில் நடைபெறும் பழமையான கால்பந்து லீக் தொடரான செர்ரி ஏ கால்பந்து தொடரில் ஸ்பால் மற்றும் ஏ.சி. மிலான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
பாவ்லோ மஸ்ஸா விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் போட்டியின் 13ஆவது நிமிடத்தில் ஸ்பால் அணியின் வீரரான மாட்டியா வலோட்டி முதல் கோலை அடித்தார்.தொடர்ந்து, போட்டியின் 30ஆவது நிமிடத்தில் ஸ்பால் அணியின் மற்றொரு வீரரான செர்ஜியோ ஃப்ளோக்கரி இரண்டாவது கோலை அடித்தார்.
இதன்பிறகு, ஏ.சி. மிலான் அணியின் வீரரான ரஃபேல் லியோ 79ஆவது நிமிடத்தில் அணிக்காக முதல் கோலை அடித்து கொடுத்தார்.இதனையடுத்து, ஸ்பால் அணியின் வீரரான பிரான்ஸிஸ்கோ விகாரி 94ஆவது நிமிடத்தில் ஏ.சி. மிலான் அணிக்கு ஓன் கோலொன்றை அடித்து கொடுத்தார்.
இதற்கமைய இந்த பரபரப்பான போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.செர்ரி ஏ கால்பந்து தொடரின் புள்ளிபட்டியலில் ஏ.சி. மிலான் அணி 43 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் உள்ளது. ஸ்பால் அணி 19 புள்ளிகளுடன் 19ஆவது இடத்தில் உள்ளது.