இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது வீரர்களுக்கான சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டுமென இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் நேரலையாக கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 தொற்றுறுதி சர்வதேச ரீதியா பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அனைத்து வீரர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இந்த நிலையில் விளையாட்டு வீரர்களுக்கான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.