பிற்போடப்பட்டுள்ள கிரிக்கட் போட்டி

images 1 1
images 1 1

அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில் இடம்பெறவிருந்த கிரிக்கட் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் குறித்த போட்டி இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி பிற்போடப்பட்டமைக்கு மேற்கிந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையும் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டுதல் முறையினை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்துவருவதன் காரணமாக கடுமையாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமை, பயிற்சி நடவடிக்கைகளின் போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.