2021 உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி இந்தியாவில்!

794abcf04ccc9e18c5f6303b60ea0dbb
794abcf04ccc9e18c5f6303b60ea0dbb

2021 உலக கிண்ண இருபதிற்கு இருபது போட்டிகளை இந்தியா மேற்கொள்ளவுள்ளது.

அதேபோல, அவுஸ்திரேலியாவினால் நடத்தப்பட இருந்த 2020 இருபதிற்கு இருபது போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிற்போடப்பட்டது.

அதற்கு பதிலாக இருபதற்கு இருபது உலக கிண்ண போட்டிகளை அவுஸ்திரேலியா 2022 ஆம் ஆண்டில் நடத்தவுள்ளது.

அதேவேளை, சர்வதேச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கும் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், நியூசிலாந்தில் 2021 பெப்பிரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறவிருந்த மகளீருக்கான 50 ஓவர் உலக கிண்ண போட்டிகள் 2022 பெப்பிரவரி-மார்ச் மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.