வீரர்களின் திறமைகள் குறித்து தனித்தனியாக அவதானம் செலுத்தக்கூடிய தலைவர் தோனி -முரளி

108668723 murali
108668723 murali

வீரர்களின் திறமைகள் குறித்து தனித்தனியாக அவதானம் செலுத்தக்கூடிய தலைவராக மகேந்திரசிங் தோனி திகழ்வதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியின் தலைமைத்துவ அணுகுமுறை புதுவிதமானது எனவும்அவரது கோட்பாடுகள் வீரர்கள் இணங்ககூடிய வகையில் அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியான நிலைகளின் போது பந்துவீச்சாளர்களின் ஆலோசனையுடனே வியூகங்களை வகுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பந்துவீச்சாளர்கள் விரும்பிய வகையில் களத்தடுப்பாளர்களை மாற்றியமைக்கும் அனுமதியினை வழங்குவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.