சகீப் அல் அசன்க்கு விளையாட அனுமதி

images 10
images 10

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

நாளை பிற்பகல் 3.30 மணியளவில் சவுதம்டனில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றிருந்தது.

அதேநேரம் கொரோனா பரவலுக்கு பின்னர் ஆரம்பமான 2 கிரிக்கட் தொடர்களையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , ஒரு வருடம் போட்டி தடை விதிக்கப்பட்டுள்ள சகீப் அல் அசன்க்கு இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கபெற்றுள்ளது.

போட்டி சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் சகீப் அல் அசன்க்கு இவ்வாறு இரு வருடங்கள் போட்டி தடை விக்கப்பட்டதுடன் பின்னர் ஒரு வருடமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.