கொவிட்-19 தொற்றுறுதியான இந்திய மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிக் துடுப்பாட்ட வீரர் கருண் நாயர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் அவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருண் நாயருக்கு கடந்த மாதம் கொவிட்-19 தொற்றுறுதியாகியிருந்தது.
இறுதி மேற்கொள்ளப்பட்ட மூன்று பரிசோதனைகளிலும் அவருக்கு தொற்றுறுதியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.