குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க வழக்கு தாக்கல்

tmk
tmk

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இதற்கு முன்னர் குறித்த இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 18 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் விசாரணைகள் இடம்பெறவுள்ளது.

அத்துடன் தி.மு.க இன் மனுவும் இணைத்துக்கொள்ளப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.