திருப்பதி தேவஸ்தானத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யின் சிபாரிசுக் கடிதத்துடன்சென்ற மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சிபாரிசு கடிதத்தை காட்டிய நிலையில் அதனை வாசித்துக்கூட பார்க்காது நிராகரித்ததுடன், ஆந்திரா, தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி.கள் வழங்கும் சிபாரிசு கடிதங்களை மட்டுமே ஏற்போம் எனவும் கூறியுள்ளர்.
ஏற்கனவே தமிழ் ஊடகங்கள் செய்தி சேகரிக்க திருப்பதி தேவஸ்தானம் அனுமதி மறுத்து ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஊடகங்களுக்கு மட்டும் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.