கொரோனா தொற்றுக்கு இலக்காகி குணமடைந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய இளைஞரொருவர் தனது வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துளள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது குடும்பத்தார் நடந்து சென்ற வழியில், எவரும் நடந்து போக கூடாது எனவும் அவர்களுக்கும் கொரோனா வந்து விடும் என்று அயலவர்கள் கூறுவதாகவும், எங்கள் வீட்டுக்கு தினமும் பால் விநியோகித்து வந்தவரிடமும் இதுபோலக் கூறியதால் அவரும் பால் விநியோகிப்பதை நிறுத்திவிட்டார்.
நாங்கள் வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதே சிக்கலாகிவிட்டது. நாங்கள் இங்கிருந்து செல்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.