இந்திய இராணுவத்தினரின் பதிலடி தாக்குதலில் 43க்கும் அதிகமான சீன இராணுவத்தினர் உயிரிழந்திருக்கலாம் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய – சீனா மோதல் நிலை குறித்து கருத்து தெரவித்துள்ள அவர், “கல்வானில் நடைபெற்ற மோதலில் சீனா தரப்பில் சிக்கிய நம் இராணுவ வீரர்களை அவர்கள் விடுவித்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
நம்மிடம் சிக்கி இருந்த சீன வீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த தாக்குதலில் பலியான சீன வீரர்களின் எண்ணிக்கையை அவர்கள் தரப்பில் தெரிவிக்க மாட்டார்கள்.
ஏனெனில் அங்குள்ள ஆட்சியாளர்கள் மக்கள் தரப்பில் கேள்விகளை எழுப்புவதையோ, கருத்து தெரிவிப்பதையோ விரும்பாதவர்கள். அதனால் மக்களிடம் அவர்கள் உண்மைகளை கூறுவதில்லை. தொடக்கத்தில் சீன வீரர்கள் 43 பேர் பலியானாதாக நம் வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில்இ இறப்பு இருக்கலாம் எனஇ நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய – சீன எல்லை பகுதியான லடாக்கின் கல்வானில் 15ம் திகதி இடம்பெற்ற மோதலில் இந்தியா இராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.