தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா

Tamil Nadu covid19
Tamil Nadu covid19

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனாதமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று 4 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 4,343 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் 3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 57 பேர் (தனியார் மருத்துவமனையில் 20) உயிரிழந்துள்னர். இதனால் இதுவரை 1321 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 33,488 மாதிரிகளும், 32,456 பேருக்கும் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.