நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும்!- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

rice
rice

தமிழகத்தில் எதிர்வரும் நவம்பரம் மாதம் முதல் ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 31.07.2020 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால்  குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே  அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டதைப் போலவே  இம்மாதமும்  குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 நவம்பர் மாதம் வரை  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்திற்கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் 2020 வரை விலையின்றி அரிசி வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.