தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) மத்தியக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்தியக் குழு உறுப்பினர்கள் மூன்று நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு அதனை அறிக்கையாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதேவேளை இவ்வாறு மத்திய ஆய்வுக் குழு தமிழகத்தில் இரண்டு முறை ஏற்கனவே ஆய்வுகளை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் இது மூன்றாவது குழுவென்பது குறிப்பிடத்தக்கது.