சமூக ஊடகங்களால் தற்போதைய நம் சமூகம் தவறான வழிவகைகளை தேர்ந்தெடுத்து அதற்குள் மூழ்கிப் போகிறது .
இந்த விடயம் சம காலத்தில் உலகளவில் பரவி இருந்தாலும் இலங்கை போன்ற தொழில்நுட்ப அறிவில் வளர்ந்துவரும் நாடுகளில் பாரிய சமூக சிதறல்களை தோற்றுவிக்கின்றமை கண்கூடு .
தொழில்நுட்ப அறிவை தொழில் முறைகளில் பயன்படுத்தும் நாடுகளில் இந்த பொழுதுபோக்கு சாதனா வழிமுறைகள் அதிகளவில் பாதிப்பை தருவது இல்லை .
ஆனாலும் போருக்கு பின்னர் மீண்டுவரும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் கைத்தொலைபேசியை மட்டுமே அதிக தொழில் நுட்பம் நிறைந்த சாதனமாக பார்க்கும் இளையவர்களால் சரியான வழிமுறைக்குள் வாழ முடியாமல் பிறழ்வடைகின்றனர் .
இவர்கள்களுக்கான சமூக ஆற்றலுள்ள சிந்தனைகளை வரவழைத்து இந்த பொழுது போக்கு சாதனங்களால் நிகழும் தீமைகளையும் தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது .