மருதம் பட்டையின் மருத்துவ பயன்கள்!

1573041740 2596
1573041740 2596

சில மரத்தின் பட்டைகள் கூட மருத்துவ குணங்கள் நிறைந்ததாக உள்ளது. அதில் ஒன்று தான் மருதம் பட்டை.

மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு.

இந்த மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது. வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது.

மேலும் இது பல நோய்களை தீர்க்க பெரிதும் உதவியாக இருக்கின்றது. அந்தவகையில் இதனை எந்தெந்த நோய்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

மருதம் பட்டை, இதன் அளவில் பாதி சீரகம் சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாக்கி, காலை மாலை 6 கிராம் அளவு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும், பருகி வர, இரத்த அழுத்த நோய், உடலை விட்டு அகலும்.

மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம், ஏலம், இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து, பொடியாகி வைத்துகொண்டு, காலை மற்றும் மாலை வேளைகளில், 6 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர, இதய நோய், விரைவில் குணமடையும்.

வாய் புண், தொண்டை கமறல் போன்றவற்றால் அவதிப்படுவோர் மருதம் பட்டை பொடியை இரண்டு கப் நீரில் கலந்து 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கமறல் நீங்கும். வாய்ப்புண் குணமாகும்.

நன்கு உலர்ந்த மருதம்பட்டையை மாவாக அரைத்து, அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா தொந்தரவுகள் குறையும்.

அரை லிட்டர் நல்லெண்ணெய் அடுப்பில் கொதிக்க விட்டு அதில் 100 கிராம் மருதம்பட்டையை போட்டு கொதிக்கவிடவும். 30 நிமிடம் கொதித்த பிறகு ஆற விட்டு அந்த எண்ணெய்யை முகவாதம், பக்கவாதம் ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இந்த எண்ணெய்யை மூட்டுவலி, இடுப்புவலி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.