ஹோமாகம-கொழும்பு கோட்டை: இன்று முதல் புதிய தொடருந்து சேவை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 4
625.500.560.350.160.300.053.800.900.160.90 4

ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதிய தொடருந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை 7 மணிக்கு ஹோமாகம தொடருந்து நிலையத்தில் பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த தொடருந்து, காலை 8:10 அளவில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைய உள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பின்னர் குறித்த தொடருந்து மாலை 6:10க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஹோமாகம நோக்கி மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.

இதேவேளை, சீரமைப்பு பணிகள் காரணமாக, பிரதான மார்க்கம் நாளை முதல் 36 மணித்தியாலங்களுக்கு மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புத்தளம் ஏ3 பிரதான மார்க்கத்தில், நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் உள்ள தொடர்ந்து குறுக்கு வீதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை 6 மணி வரையில், 36 மணித்தியாலங்களுக்கு குறித்த தொடர்ந்து மார்க்கம் மூடப்பட உள்ளது.

குறித்த மார்க்கத்தில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து தொடருந்துகளின் சேவைகளும், கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலைய தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.