காவற்துறையினரிடம் இருந்து சாரதிகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்!

360 F 46933096 7hDOE4g7UvzZQcCgfVEDQE59k2dDGNlD
360 F 46933096 7hDOE4g7UvzZQcCgfVEDQE59k2dDGNlD

கொழும்பு புத்தளம் ஏ-3 பிரதான வீதியின் நீர்கொழும்பு கல்கந்த சந்தி பகுதியை, இன்று காலை 6 மணி முதல் 36 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நீர்கொழும்பு – கல்கந்த சந்தி தொடருந்து குறுக்குப் பாதையில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை மாலை 6 மணிவரை குறித்த வீதி மூடப்பட்டிருப்பதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளனர்.