எந்த இடங்களில் தொலைபேசியை வைக்கக்கூடாது தெரியுமா?

11 2
11 2

இக்காலக்கட்டத்தில் ஒரு மொபைல் இல்லாத நபரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விடயமாகும். உலகெங்கிலும் உள்ள செல்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக நாம் ஒவ்வொருவரும் நமது மொபைல்களை மிகவும் நெருக்கமான முறையில் நம்மோடு வைத்துக்கொண்டு உதவுகிறோம்.

உங்கள் தொலைபேசியை சில இடங்களில் வைத்திருப்பது சாதனத்திற்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது என்பதை உங்களுக்கு தெரியுமா. தெரியாது என்றால் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

உள்ளாடை – மருத்துவத்துறையில், செல்போன் கதிர்வீச்சு புற்றுநோயை உருவாக்குமா.? என்பது பற்றிய ஒருமித்த கருத்து ஏதுமில்லை. ஆனால் சில விஞ்ஞானிகளின் கருத்துப்படி, பெண்கள் அவர்களின் மேலாடைகளுக்குள் மொபைலை வைக்கும் பழக்கம் கொண்டிருந்தாள் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும். எனவே பெண்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இடுப்பு பகுதியில் – ஆராய்ச்சியின் படி, உங்கள் தொடை அருகில் வைக்கப்படும் உங்கள் தொலைபேசியானையது ஹிப் இடுப்பு எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. எனவே உங்கள் எலும்புகளை நீங்கள் கவனித்துக்கொள்ள விரும்பினால் பேண்ட் அல்லது வேட்டி அணிந்திருக்கும் போது உங்கள் சாதனத்தை அடர்த்தியான பையில் வைக்க மறக்க வேண்டாம்.

குழந்தைகளின் அருகில் – அவசர அவசரமான அம்மாக்கள் அடிக்கடி தங்கள் தொலைபேசியை தங்களின் குழந்தைகளின் அருகிலேயே வைத்து விடுகிறார்கள். இது பாதுகாப்பற்றது என்று சில ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். குழந்தைகள் மீதான செல்போன்களின் தாக்கமானது அவர்களின் செயல்திறன் மற்றும் கவனக்குறைவு சீர்குலைவு போன்ற நடத்தை பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

தலையணை அடியில் – முதலில் அடிக்கடி வெளிச்சமூட்டும் நோட்டிபிகேஷன்கள் உங்கள் தூக்கத்தை கெடுக்கும். மொபைலில் இருந்து வெளிப்படும் புறம்பான ஒளி மெலடோனின் உற்பத்தியை பாதிக்கிறது. இது உடலுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த தூக்கத்துடன் பிரச்சினைகளை ஏற்படுகிறது. தலையணை அடியில் மொபைலை வைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்தால் அதன் மின்காந்த கதிர்வீச்சினால் தலைவலி ஏற்படும். மேலும் தொலைபேசி வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்களும் ஏற்படலாம்.