யாழில் சட்டவிரோத மதுபான சாலை முற்றுகை

images 14
images 14

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் பின் வீதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபானசாலை யாழ் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று முற்றுகையிடப்பட்டது.

முற்றுகையின் போது சட்டவிரோதமாக மதுபான கொள்வனவுக்கு வந்த ஒருவரும் மதுபானசாலை முகாமையாளர் மற்றும் மதுபானம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு தொகுதி மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.